சேலம், ஆக.31- மத்திய அரசின் வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் சனியன்று சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவ னங்களை தொடர்ச்சியாக தனியார்மய மாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக தற்போது நாட்டின் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவானது நாட்டிற்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே, வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும். மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளி களுக்கு வழங்கிய வராக்கடன்களை வசூலிக்க முடியாமல் பிரச்சனையை திசை திருப்பும் வகையிலேயே வங்கிகளை இணைப்போம் என அறிவித்துள்ளது. இதன்காரணமாக வங்கி சேவை முடக்கப்படும். மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்த பணம் உள்ளிட்ட அனைத்து சேமிப்புகளும் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டி அனைத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் சனி யன்று சேலம் மாநகரம் கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. சாமிநாதன் தலைமை வகித்தார். இதில் இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.தீனதயாளன், அதிகாரிகள் சங்கத்தின் சுரேஷ்குமார், ஏஐபிஇஏ எஸ். சம்பத், என்ஐபிஇஓ நாகராஜன் , என்சிபிஇ நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.